என் மலர்
உள்ளூர் செய்திகள்

நூதன முறையில் 2¼ பவுன் நகை திருடிய 2 வாலிபர்கள் கைது
- ஷாம், ஆனந்த் ஆகிய 2 வாலிபர்கள் நகைகளை வாங்க வந்தனர்.
- 2¼ பவுன் நகையை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பெலகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது29). இவர் அதே பகுதியில் தனியார் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவரது நகை கடைக்கு சம்பவத்தன்று திருவண்ணாமலை செங்கம் அருகே காத்தமடுவு பகுதியைச் சேர்ந்த சாமய்யா என்கிற ஷாம் (25), ஆனந்த் (19) ஆகிய 2 வாலிபர்கள் நகைகளை வாங்க வந்தனர். சிறிது நேரத்தில் சாமய்யா என்கிற ஷாம் கடைக்கு வெளியே சென்று அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு புறப்பட தாயராக இருந்தார். அப்போது ஆனந்த் 2¼ பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு புறபட தயராக இருந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்றனர். உடனே ராஜாராம் திருடன் திருடன் என்று கத்திக் கொண்டு மோட்டார் சைக்கிள் பின்னால் ஓடி சென்றார். அப்போது 2 பேரும் சென்ற மோட்டார் சைக்கிள் வேகதடையில் மோதி கவிழ்ந்தது. இதில் 2 பேரும் கீழே விழுந்து கிடந்தனர். ராஜாராமின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மோட்டார் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் ஆனந்த் என்பவரை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். சாமய்யா என்கிற ஷாம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து ராஜாராம் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசாரிடம் ஆனந்தை ஒப்படைத்தனர். நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சாமய்யாவை தேடி வருகின்றனர்.
பட்டபகலில் நடந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






