search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளியனூர் போலீசாரிடமிருந்து இ-சலான் மெஷினை பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது
    X

    கைது செய்யப்பட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.

    கிளியனூர் போலீசாரிடமிருந்து இ-சலான் மெஷினை பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது

    • போக்கு வரத்து வீதிமிறலில் ஈடுபடுபவர்களிடம் இ- சலான் மெஷின் மூலம் ஸ்பாட் பைன் வசூல் செய்து ரசீது வழங்கி வருகின்றனர்.
    • இந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.

    விழுப்புரம்:

    திண்டிவனம்-புதுச்சேரி 4 வழிச் சாலை யில் மது விலக்கு செக்போஸ்ட் உள்ளது. இங்கு 24 மணி நேரமும் கிளியனூர் போலீ சார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். புதுச்சேரியில் இருந்து தமிழ கத்திற்கு கடத்தி வரப்படும் மதுபானங்கள், அதை கடத்தி வர பயன்படுத்தப்படும் வாக னங்களை பறிமுதல் ெசய்வது இவர்களது தலை யாய பணியாகும். மேலும், போக்கு வரத்து வீதிமிறலில் ஈடுபடுபவர்களிடம் இ- சலான் மெஷின் மூலம் ஸ்பாட் பைன் வசூல் செய்து ரசீது வழங்கி வருகின்றனர். அதன்படி, கடந்த 24-ந் தேதி கிளியனூர் செக் போஸ்டில் திருஞானம், கார்த்தி ஆகிய 2 போலீசார் வாகன தணிக்கையில் ஈடு பட்டு வந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹெல்மெட் அணிந்த படி வந்தனர். மோட்டார் சைக்கிளை திருஞானம் என்ற போலீசார் நிறுத்தினர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்துவது போல நடித்து காவலர் திருஞானம் கையில் இருந்து இ-சலான் மெஷினை பிடிங்கிக் கொண்டு தப்பி ஒடிவிட்டனர். சம்பவமறிந்து விரைந்து வந்த விழுப்புரம் மாவட்ட சுப்பிரண்டு ஸ்ரீநாதா விசாரணை நடத்தினார்.

    மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து அதன் உரிமையாளரை கண்டுபிடிக்கவும், இந்த சாலையில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கிளியனூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையி லான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் உள்ள சீர்பாத நல்லூர் ஏழுமலை மகன் சதீஷ் (வயது 22), திரு வண்ணாமலை மாவட்டம் சோமாசி பாடி ரங்கநாதன் மகன் சந்தோஷ் (20) ஆகி யோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவ்விருவரையும் கைது செய்த போலீசார் அவர்க ளிடம் விசாரணை நடத்தி னர். அதில் 2 பேரும் புதுச்சேரியை சுற்றிப் பார்த்து விட்டு, மது அருந்தி வீடு திரும்பியதாகவும், போலீசாரிடம் மாட்டிக் கொண்டால் பைன் போடு வார்கள் என்ற பயத்தில் இ.சலான் மெஷினை பிடிங்கி சென்றதாகவும் தெரிவித்தனர். மேலும், அந்த மெஷி னை கொந்தாமூர் மேம்பா லத்தின் அடியில் ஒளித்து வைத்துள்ளதாகவும் கூறி னர். அங்கு சென்ற போலீ சார் இ-சலான் மெஷினை கைப்பற்றினர். வானூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி 2 பேரையும் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×