search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் 2 பெண்கள் மாயம்
    X

    தருமபுரியில் 2 பெண்கள் மாயம்

    • மாலை திரும்பி வந்து பார்த்தபோது பெண்ணை காணவில்லை.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் கந்தமேடு பகுதியை சேர்ந்தவர் அன்வர். இவரது மனைவி பர்வீன் (வயது 45). இவர் சத்துணவு ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகளுக்கு 17 வயது ஆகிறது. வீட்டிலேயே இருந்து வந்தார்.

    நேற்று பர்வீன் வேலைக்கு சென்று விட்டு மாலை திரும்பி வந்து பார்த்தபோது அவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிபர்த்தும் அந்த பெண்ணை பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து பர்வீன் அரூர் போலீசில் தனது மகள் காணாமல் போனது குறித்து புகர் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல பென்னாகரம் அருகேயுள்ள வி.அக்ரஹாரம் பூஞ்சோலை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் பிளஸ்-2 படித்து வரும் தனது மகளை காணவில்லை என்று பென்னாகரம் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×