search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி அருகே யானை தாக்கி 2 பெண்கள் படுகாயம்
    X

    கோப்பு படம்.

    பழனி அருகே யானை தாக்கி 2 பெண்கள் படுகாயம்

    • பழனி அருகே யானை தாக்கி 2 பெண்கள் படுகாயமடைந்தனர்
    • இருவரும் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள ஆயக்குடி பொன்னிமலை சித்தன்கோவில் கரடு பகுதியில் இன்று அதே பகுதியை சேர்ந்த வள்ளிநாயகம், முனியம்மாள் ஆகியோர் தோட்ட வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த யானைகள் திடீரென அவர்களை விரட்டி தாக்கியது. இதில் 2 பெண்களும் கூச்சலிட்டனர்.

    உடனே அருகில் இருந்த மக்கள் ஓடிவந்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர். படுகாயமடைந்த இருவரும் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×