என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
- வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
- இதனால் பதறிப்போன பெற்றோர் உடனே அவரை நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாகுல்அமீது. இவரது மகள் ஹர்வின்பானு (வயது 18). இவர் பொம்மிடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வருகிறார். ஹர்வின்பானு நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் உடனே அவரை நண்பர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தனர். எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் ஹர்வின்பானு மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து சாகுல்அமீது பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று காரிமங்கலம் அருகே புதூர் குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் இந்திராணி (18). இவர் பாலக்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவர் கடந்த 15-ந் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பிவரவில்ைல. இதுகுறித்து மாணவியின் தாய் தமிழ்செல்வி காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்