என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
- லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் திருட முயன்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், போலீசாரிடம் ஒப்படைத்தார்.
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்,
ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி மற்றும் வருவாய்துறையினர் நேற்று முன்தினம் பாகலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நந்திமங்கலம் அருகே ஏரிக்கரையில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் திருட முயன்றது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த தாசில்தார், போலீசாரிடம் ஒப்படைத்தார். பாகலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல ஆலப்பட்டி வருவாய் ஆய்வாளர் ராமலட்சுமி கடந்த, 8-ந் தேதி இரவில், வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது கொடுகூர் கிராமத்தில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 3 யூனிட் மண் கடத்தியது தெரிந்தது.
அவரது தகவல் படி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், லாரியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






