என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 வாலிபர்கள் விஷம் குடித்து தற்கொலை
    X

    2 வாலிபர்கள் விஷம் குடித்து தற்கொலை

    • வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே மேலுமலை பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது26). கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்தவித பலனும் அளிக்காததால் விரக்தியில் இருந்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து உறவினர்கள் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே மஸ்தபதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாதேவ் (வயது22). கூலித்தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதுகுறித்து பல்வேறு மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், எந்தவித பலனும் அளிக்காததால் விரக்தியில் இருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பெங்களூரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×