search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு இடங்களில் இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்
    X

    வெவ்வேறு இடங்களில் இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்

    • வெல்டிங் கடைக்கு செல்வதாக கூறி சென்ற குமார் வீடு திரும்பவில்லை.
    • உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    ஏரியூர்,

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள கொம்பாடியூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது37). இவர் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பவுதா (32) என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 13-ந் தேதி தனது வெல்டிங் கடைக்கு செல்வதாக கூறி சென்ற குமார் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பவுதா பெரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார்.

    இதேபோல் பெரும்பாலை அருகே கொம்பாடியூர் கிராமத்தை சேர்ந்த சீனு. இவரது மனைவி பிரியா (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகியுள்ள நிலையில் குழந்தை இல்லை.

    இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் பிரியா கோபித்து கொண்டு கடந்த 6 மாதங்களாக செம்மேட்டில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 13-ந் தேதி கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து பிரியாவின் தந்தை முருகேசன் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பிரியாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×