என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி : ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது
    X

    கோப்பு படம்

    பழனி : ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது

    • பழனி அடிவாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது ஒரு கும்பல் இவரை ஓட, ஓட விரட்டி படுகொலை செய்தனர்
    • இந்த கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்தவர் கோபால் மகன் வடிவேல் (வயது 27). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    கடந்த 3-ந் தேதி பழனி அடிவாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தபோது ஒரு கும்பல் இவரை ஓட, ஓட விரட்டி படுகொலை செய்தனர்.

    இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. சிவசக்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் குரும்ப பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து (27), அழகாபுரியைச் சேர்ந்த சுரேஷ் (28) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    இக்கொலை வழக்கில் மேலும் சிலரை தேடி வந்த நிலையில் செல்லப்பாண்டி மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறு வாக்குவாதமாக முற்றி கொலையில் முடிந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    பழனி டவுன் மற்றும் சுற்றுப்புற பகுதியில் அரிவாள் வெட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சமான உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொண்டு குற்றவாளிகளை போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×