என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
- சேலத்தில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது செய்யபப்ட்டனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்:
மைசூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் விரைவு ரெயில் நேற்று நள்ளிரவு தருமபுரி அருகே வந்தது. அப்போது ரெயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதில் புதுக்கோட்டை யைச் சேர்ந்த மொய்தீன் மற்றும் அப்துல் சலாம் ஆகியோர் சந்தேகப் படும் வகையில் 5 பைகளை வைத்திருந்தனர்.
ரெயில்வே போலீசார் கைபைகளை சோதனை செய்த போது அதில் பான்பராக் மற்றும் குட்கா ,புகையிலை பொருட்கள் இருந்தது. இதையடுத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த மொய்தீன் மற்றும் அப்துல் சலாம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் ஜங்ஷன் ரெயில்வே போலீ சார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story