search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பம் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    கம்பம் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது

    • கம்பம் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் கடைக்கு சென்று சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    கம்பம்:

    கம்பம் மணிநகரத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 42). ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று கிராம சாவடி தெருவில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை வாங்கி பயன்படுத்தி உள்ளார்.

    அப்போது போதை தலைக்கேறி மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கடைக்கு சென்று சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ரூ.10,752 மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து செல்வம் என்பவரை கைது செய்தனர்.

    ராயப்பன்பட்டி போலீசார் ஆனைமலையான் பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புகையிலை விற்ற அழகர்சாமி (42). என்பவரை கைது செய்து 23 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×