என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமாநில  வாலிபர் உள்பட 2 பேர் சாவு
    X

    வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் சாவு

    • வீராணம் அருகே உள்ள மஞ்சவாடி கணவாய் அருகே வந்தபோது நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார்.
    • இதில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பலியானார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கோட்டம்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகன் கிருஷ்ணன் (வயது 28) . இவர் அவருடைய மோட்டார்சைக்கிளில் சேலத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீராணம் அருகே உள்ள மஞ்சவாடி கணவாய் அருகே வந்தபோது நிலைதடுமாறி தவறி கீழே விழுந்தார். இதில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே கிருஷ்ணன் பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.

    மற்றொரு சம்பவம்

    இமாச்சல பிரதேசம் மாநிலம் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுபாஷ்சந்த் ( வயது 49). இவர் சேலத்தில் தங்கி இருந்து ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று கொண்டலாம்பட்டி அருகே ரோட்டை கடக்கும்போது அதிவேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சுபாஷ்சந்த் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுபாஷ்சந்த் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர். இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்த அடையாளம் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களில் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

    Next Story
    ×