search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
    X

    கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

    • சக்திவேல் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • இருவரையும் போலீசார் கைது செய்து, 475 மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்திற்குட்பட்ட கெளாபாறை, பையர்நா யக்கன்பட்டி கிராமங்களில் கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் உத்தரவின்படி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த கெளாபாறை கிராமத்தை சேர்ந்த தீர்த்தகிரி மகன் சின்னராஜ் (வயது 75), பையர்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் தீர்த்தகிரி (60) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, 475 மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×