என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரை வழிமறித்து வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
- மோதலை அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளர்.
- சந்தோஷ், நவீன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள எருதாளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 34). இந்த ஊரில் கோவில் திருவிழாவையொட்டி கலை நிகழ்ச்சி நடந்துள்து. அப்போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (எ) ஜீவா (30) என்பவர் தானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குறிப்பிட்ட பாடலுக்கு நடனம் ஆடுவேன் என்று தகராறு செய்துள்ளார்.
அப்போது ஆனந்துக்கும், சந்தோசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அங்கிருந்தவர்கள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளர்.
இந்த நிலையில் நேற்று ஆனந்த் காரில் சென்றபோது, சந்தோஷ் தனது கூட்டாளிகள் முரளி, நவீன்குமார், மாதேஷ் ஆகியோருடன் வந்து வழிமறித்து சந்தோசை தாக்கினர்.
இதுகுறித்து ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து இதில் சந்தோஷ், நவீன்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story