search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
    X

    கோத்தகிரியில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

    • கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க ஆபரேஷன் 4.0 என்ற பெயரில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.
    • போலீசார் 3.5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் தலைமையில் மாவட்டத்தில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க ஆபரேஷன் 4.0 என்ற பெயரில் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.

    இளைய சமுதாயத்தை சீரழிக்கும் கஞ்சாவை விற்பனை செய்பவர்களை பாரபட்சம் பார்க்காமல் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் கான் தலைமையிலான போலீசார் முஜாஹிர், சுரேந்தர் ஆகியோர் கட்டபெட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பீகாரை சேர்ந்த கஞ்சன்குமார் என்பதும், பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப் பட்டது.

    கஞ்சன்குமார் பீகாரில் இருந்து கோத்தகிரிக்கு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிய வந்துள்ளார். இங்கு அவருக்கு போதிய வேலை கிடைக்கவில்லை. இதனால் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க அவர் ஆசைப்பட்டார். இதையறிந்த பீகாரைச் சேர்ந்த அவரது நண்பரான பங்கஜ் குமார், ஊருக்கு சென்று விட்டு கிலோ கணக்கில் கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். அந்த கஞ்சாவை கஞ்சன்குமாரிடம் கொடுத்து விற்கச் சொல்லியுள்ளார். அவ்வாறு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட போது தான் போலீசாரிடம் கஞ்சன்குமார் சிக்கிக் கொண்டார்.

    போலீசார் கஞ்சன்குமாரையும், பங்கஜ்குமாரையும் கைது செய்தனர். போலீசார் அவர்களிடத்தில் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3.5 கிலோ கஞ்சா மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிடி பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்த னர்.

    Next Story
    ×