என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு இடங்களில் திருமணமான 2 பெண் மாயம்
- நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது.
- இதனால் மனமுடைந்து காணப்பட்ட கலைவாணி வீட்டை விட்டு மாயமானார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி நேருநகர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவரது மனைவி கலைவாணி (வயது36). இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கலைவாணி வீட்டை விட்டு மாயமானார். இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
இதேபோல் கோட்டப்பட்டி அடுத்துள்ள தா.அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சூரியா (வயது22). இவர்களுக்கு ஹரிஸ் (4), என்கிற மகனும், தஸ்வந்த் ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளன. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து நேற்று சூரியா தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு திடீரென மாயமானார். இது குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






