search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூலித்தொழிலாளி 2 பேர் விஷம் குடித்து தற்கொலை
    X

    கூலித்தொழிலாளி 2 பேர் விஷம் குடித்து தற்கொலை

    • கணவர் ஞானவேல் மனவேதனை–யில் இருந்து வந்தார்.
    • விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் ஞானவேல் (வயது38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.

    இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி ஒரு விபத்தில் இறந்து விட்டார். இதனால் அவரது கணவர் ஞானவேல் மனவேதனையில் இருந்து வந்தார். கடந்த மாதம் 6-ந் தேதி ஞானவேல் கிருஷ்ணகிரி அணை பகுதிக்கு வந்தார். அங்கு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது உடல் அங்கேயே அழுகிய நிலையில் கிடப்பதை கண்டு அந்த வழியாக சென்றவர்கள் கிருஷ்ணகிரி டேம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து ஞானவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி சிறுவனபட்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (50). கூலித்தொழிலாளியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி, நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×