என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகே வேன் கவிழ்ந்து 2 பேர் பலி: உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை
- கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
- 20-க்கும் மேற்பட்ட படுகாயம் அடைந்த நிலையில் வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேப்பனபள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள கட்டாயம்பேடு. பாலனப்பள்ளி கே.என்.போடூர், பதிமடுகு, கங்கமடுகு, சிங்கிரிப்பள்ளி, தீர்த்தம் மற்றும் கர்நாடக மாநில கிராமங்களில் இருந்து தினமும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் , ஆண்கள் பாகலூர் பேரிகை மற்றும் கர்நாடகா மாநில பகுதி சர்ஜபுரம், பெங்களூர் மாலூர் மாஸ்தி ஆகிய பகுதிகளில் தினமும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
இவர்களை இப்பகுதியில் இருக்கும் முனியப்பன் என்கிற வேன் ஓட்டுநர் தன் சரக்கு வேனில் தினமும் அழைத்துச் சென்று வேலை முடிந்த பின் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவது வழக்கம். இந்த நிலையில்நேற்று வேலை முடிந்து சுமார் மாலை 4 மணி அளவில் வேப்பனப்பள்ளி நோக்கி சரக்கு வேன் ஆட்களை ஏற்றி வந்து கொண்டிருதது. அப்போது ராமன் தொட்டி அருகே வனப்பகுதியில் ஆபத்தான வளைவுகளில் சரக்கு வேன் வந்த போது அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்து சரக்கு வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சரக்கு வாகனத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்டோர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே போடூர் கிராமத்தை சேர்ந்த வீரபத்திரன் மற்றும் கட்டாயம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னக்கா என்ற பெண் 2 பேரும் சம்பவ இடத்திலியே உயிரிழந்தனர். மேலும் 10 அடி பள்ளத்தில் இரண்டு பேர் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து கவலைக்கிடமாக இருந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக பேரிகை போலீசருக்கு தகவல் தெரிவித்து அங்கு விரைந்து வந்த பேரிகை போலீசார் படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக ஓசூர்,சூளகிரி, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திலேயே பலியான வீரபத்திரன் மற்றும் சின்னக்கா இருவரின் உடலை கைப்பற்றி உடல் பிரதேசத்திற்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட படுகாயம் அடைந்த நிலையில் வெவ்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.






