search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்
    X

    கோப்பு படம்

    கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயம்

    • தேனி அருகே கல்லூரி மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்
    • போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்

    தேனி:

    தேனி அருகே அப்பிபட்டியை சேர்ந்த அய்யர் மகள் சுபிதா(24). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் ஆடிட்டிங் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அய்யரின் மனைவி மற்றும் மகன் வெளிவேலையாக சென்றுவிட்டனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த சுபிதா மாயமாகி இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    பெரியகுளத்தை சேர்ந்தவர் நிஜாம் மகள் அப்ரா. இவர் பெரியகுளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாததால் உத்தமபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த அப்ரா திடீரென மாயமானார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×