என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செம்மரம் வெட்டி கடத்தல் வழக்கில் 2 பேர் தலைமறைவு
Byமாலை மலர்27 July 2023 9:21 AM GMT
- இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
- ஆந்திர மாநில வனச்சரகர் வெங்கட் ரமணா தலைமையில், வனத்துறை அதிகாரிகள் வெளாம்பள்ளி, சித்தேரி மலை கிராமங்களுக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அரூர்,
ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் வெட்டி கடத்தியதாக தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வெளாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுந்தரவேலு (21), அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் அருணாசலம் (32) ஆகியோரை அந்த மாநில வனத்துறையினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்த நிலையில் , நீதிமன்ற காவலில் இருந்து ஜாமீனில் இருவரும் வெளி வந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆந்திர மாநில வனச்சரகர் வெங்கட் ரமணா தலைமையில், 5 பேர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் வெளாம்பள்ளி, சித்தேரி மலை கிராமங்களுக்கு வந்து தலைமறைவாக இருப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது அரூர் வனச்சரகர் நீலகண்டன் உள்ளிட்ட தமிழக வனத்துறையினர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X