search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்- 2 தேர்வை 19877 பேர் எழுதினர்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்- 2 தேர்வை 19877 பேர் எழுதினர்

    • தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. வருகிற 3-ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது.
    • இதற்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இரு மையங்களில் 352 தனித்தேர்வர்களும் எழுதுகிறார்கள்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. வருகிற 3-ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தேர்வை 10,000 மாண வர்கள், 9,877 மாணவிகள் என மொத்தம் 19,877 பேர் எழுதுகிறார்கள்.

    இதற்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இரு மையங்களில் 352 தனித்தேர்வர்களும் எழுதுகிறார்கள். மேலும் தேர்வு கண்காணிப்பு பணி யில் 1800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தேர்வுக்கான வினாத் தாள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள பாதுகாப்பு மையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு இன்று காலையில் உரிய பாது காப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. மாண வர்கள் காப்பியடிப்பது தவிர்க்க பறக்கும் படையினர் சுற்றி வந்தனர்.மாவட்ட முழுவதும் உள்ள தேர்வு மையங்கள் அருகில் அசம்பா வித சம்ப வங்களை தவிர்க்க போலீ சார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட னர். மேலும் அரசு போக்கு வரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. செல்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    Next Story
    ×