என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 மையங்களில் நடந்தது: 2,378 பேர் குரூப்-1 தேர்வை எழுத வரவில்லை
- அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் குரூப்-1 போட்டித் தேர்வு நடந்தது.
- கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யத்தின் குரூப்-1 போட்டித் தேர்வு நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19 தேர்வு மையங்களில் தேர்வு எழுத மொத்தம் 5 ஆயிரத்து 512 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த தேர்வை 3 ஆயிரத்து 134 பேர் எழுதினார்கள். 2 ஆயிரத்து 378 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், குந்தாரப்பள்ளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 19 மையங்களில் தேர்வு நடந்தது.
இந்த தேர்வை கண்காணிக்க 19 முதன்மை கண்காணிப்பாளர்களும், 2 பறக்கும் படையினரும், 6 நடமாடும் அலகுகளும், 19 ஆய்வு அலுவலர்கள், 20 வீடியோகிராபர்கள், 6 ஆயுதம் ஏந்திய போலீசார், 19 தேர்வு கூட காவலர்கள் என மொத்தம் 91 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் தொகுதி&1 போட்டி தேர்வை எழுதும் தேர்வர்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என அனைத்து விதமான அடிப்படை வசதிகளும், சிறப்பு நடமாடும் மருத்துவ குழுவும் தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.






