என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெட்ரி அருவிக்கு 14-ந் தேதி மரபு நடை பயணம்
    X

    மெட்ரி அருவிக்கு 14-ந் தேதி மரபு நடை பயணம்

    • அஞ்செட்டி அருகிலுள்ள மெட்ரி அருவிக்கு, மரபு நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட ப்பட்டுள்ளது.
    • நமது மாவட்டத்தின் தொன்மை சிறப்புகளை அறியவும், பாதுகாக்கவும் வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    "காணத்தக்க கிருஷ்ண கிரி" என்ற விழிப்புணர்வு சுற்றுலாத் திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாசார பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும்,

    அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் இந்த திட்டத்தை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

    அதைத் தொடர்ந்து வருகிற 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு அஞ்செட்டி அருகிலுள்ள மெட்ரி அருவிக்கு, மரபு நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட ப்பட்டுள்ளது.

    இதில் மாவட்ட கலெக்டர், உயர் அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள்.

    பொதுமக்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து இத்திட்டத்தில் கலந்துகொண்டு, நமது மாவட்டத்தின் தொன்மை சிறப்புகளை அறியவும், பாதுகாக்கவும் வேண்டும் என கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×