search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழைக்கு மேட்டுப்பாளையத்தில் 12 வீடுகள் சேதம்- தாசில்தார் நேரில் ஆய்வு
    X

    தொடர் மழைக்கு மேட்டுப்பாளையத்தில் 12 வீடுகள் சேதம்- தாசில்தார் நேரில் ஆய்வு

    • வருவாய்த்துறை சார்பில் அறிக்கை தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்ப ஏற்பாடு
    • சேதம் அடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 1 மாதமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிகப்ப டியாக கனமழை பெய்கிறது.

    மேட்டுப்பாளையம் தாலுகாவில் மட்டும் 12 வீடுகள் கனமழை காரண மாக சேதம் அடைந்து உள்ள தாக மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் தெரி வித்து உள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் தாலுகாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 37 செ.மீ. மழை பெய்தது. இதனால் அங்கு உள்ள 100-க்கும் மேற்பட்ட குளம் -குட்டை கள், தடுப்பணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகின்றன. மேலும் பல விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி வெளியேற வழியின்றி முடங்கி உள்ளது.

    அதிலும் குறிப்பாக மேட்டுப்பாளையம் நகராட்சி, சிக்கதாசம்பா ளையம் ஊராட்சியில் 4 வீடுகள், சிக்காரம்பாளையம் ஊராட்சி யில் 4 வீடுகள், மூடுதுறை மற்றும் கெம்மா ரம்பாளையம் ஊராட்சி களில் தலா 1 வீடுகள், மருதூர் ஊராட்சியில் ஒரு வீடு என மொத்தம் 12 வீடுகள் சேதமாகி உள்ளன.

    இதுதொடர்பாக வருவா ய்த்துறை சார்பில் அறிக்கை தயார் செய்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சேதம் அடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×