என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    ஆனை மலை, கோட்டூர் இலங்கை தமிழர் முகாமில் 112 புதிய குடியிருப்புகள்
    X

    ஆனை மலை, கோட்டூர் இலங்கை தமிழர் முகாமில் 112 புதிய குடியிருப்புகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்து சமையல் பாத்திர தொகுப்புகளை வழங்கினார்

    கோவை

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆனை மலை வட்டாரம், கோட்டூர் இலங்கை தமிழர் முகாமில் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 112 புதிய குடியிருப்புகளை திறந்து வைத்ததையடுத்து, இம்முகாமில் அமைக்கப்ப ட்டிருந்த கல்வெட்டினை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் முகாமில் உள்ள நபர்களுக்கு சமையல் பாத்திர தொகுப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பொள்ளா ச்சி சார் ஆட்சியர் பிரியங்கா , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கோட்டூர் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன்,

    துணை தலைவர் கிருஷ்ணவேணி, வட்டாட்சியர் ஆனைமலை ரேணுகாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், உதவி செயற்பொறியாளர் முனிராஜ், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வட்டாட்சியர் ஸ்ரீரேகா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1591 வீடுகளை திறந்து வைத்தார். முதல்-அமைச்சர் 2021-22 சட்டமன்ற கூட்டத் தொடரின்போது பேரவையில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை இந்த அரசு உறுதி செய்யும்எ ன்று அறிவித்ததுடன், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தார்.தமிழ்நாடு அரசின் சார்பில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு துணி மணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கோவை மாவட்டம், ஆனைமலை வட்டாரம் கோட்டூரில் 1165 சதுர அடி பரப்பளவில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 4 வீடுகள் கொண்ட 28 தொகுப்பு வீடுகள் என மொத்தம் 112 வீடுகள் ரூ. 5.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு சமையலறை, படுக்கை அறை, வரவேற்பறை, கழிப்பறை, எல்இடி மின் விளக்குகள், 2 மின்விசிறிகள், கான்கீ ரீட் கூரையுடன், பிவிசி கதவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன. இம்மு காமில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படைவசதிகளும் இங்கு அமைக்கப்பட்டு ள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×