என் மலர்
உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு மாணவி மாயம்
- வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோட்டை மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பிவரவில்லை. இதுகுறித்து சிறுமியின் தந்தை ஓசூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






