search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு மாணவன் மாயம்
    X

    10-ம் வகுப்பு மாணவன் மாயம்

    • தலைமுடியை மட்டும் மாடலாக வெட்டிக் கொண்டு வந்துள்ளாய் என தந்தை கண்டித்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டை விட்டு பள்ளி மாணவன் வெளியேறி தலைமறைவாகி விட்டார்.

    பாலக்கோடு,

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாதப்பன் இவரது மகன் நித்திஷ் (15). கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளியில் 10- ம் வகுப்பு படித்து வருகிறார். அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டிலிருந்த மாணவன் தலைமுடி மாடலாக வெட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளான்.

    படிப்பில் சரியாக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் தலைமுடியை மட்டும் மாடலாக வெட்டிக் கொண்டு வந்துள்ளாய் என தந்தை கண்டித்தார்.

    வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டை விட்டு பள்ளி மாணவன் வெளியேறி தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கடந்த ஏழு நாட்களாக உறவினர், நண்பர்கள் என பல்வேறு பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து மாரண்டஹள்ளி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் மாயமான மாணவனை போலீசார் ேதடி வருகின்றனர்.

    Next Story
    ×