என் மலர்
உள்ளூர் செய்திகள்

10-ம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
- தேர்வையும் சரியாக எழுதவில்லை
- கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை
பரமத்தி வேலூர்:
நாமக்கல் பழைய ஆர்.டி.ஓ ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் கர்நாடக மாநிலம், பெங்களூரில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்புச்செல்வி. இவர்களுக்கு விக்னேஸ்வ ரன் (வயது 15) என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
விக்னேஸ்வரன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்ததுடன் தற்போது பொதுத்தேர்வும் எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இவர் சரியாக படிக்கவில்லை எனவும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வையும் சரியாக எழுதவில்லை எனவும் பெற்றோர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவர் பரமத்திவேலூர் அருகே படமுடிபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.இந்த நிலையில் விக்னேஸ்வரன் திடீரென காணாவில்லை. இதனால் அவரது பாட்டி அருகில் உள்ள பகுதியில் தேடியுள்ளார். பின்னர் வீட்டில் உள்ள அறைகளில் தேடிய போது, அவர் வீட்டின் மேலே உள்ள கம்பியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அவரது பாட்டி அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் நாமக்கல்லில் உள்ள தனது மகள் அன்புச் செல்வி தகவல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ் பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் சம்பவ இடத் துக்கு வந்து விக்னேஸ்வ ரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரவுள்ள நிலையில் பெற்றோர்கள் ஒழுங்காக படிக்கவில்லை என திட்டியதால் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.






