search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் ரூ.1000 கோடியில் புதிய குடிநீர் திட்டம்அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு
    X

    காந்தி மார்க்கெட்டில் புதிய காய்கனி வளாகம் கட்டுமான பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    ஒட்டன்சத்திரத்தில் ரூ.1000 கோடியில் புதிய குடிநீர் திட்டம்அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு

    • ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் காந்தி மார்கெட் புதிய காய்கனி வளாகம் கட்டுமான பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • பேரூராட்சி, ஊராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கென ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, வரும் 31-ந் தேதி அதற்கான டெண்டர் விடப்படுகிறது.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் காந்தி மார்கெட் புதிய காய்கனி வளாகம் கட்டுமான பணிகளை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஒட்டன்சத்திரம் பகுதியில் காய்கறி உற்பத்தி அதிகமான பகுதியாக உள்ளது. தினசரி 1000 டன் முதல் 1500 டன் வரை காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. மேலும், இப்பகுதியில் காய்கறி விலை குறைவாக உள்ள சமயங்களில் அவைகளை சேமித்து வைக்கும் விதமாக ரூ.5 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.

    தொழிற்பயிற்சி நிலையத்திற்கென ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்படவுள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம் பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் ரூ.2 கோடி மதிப்பீட்டிலும், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ரூ.3 கோடி மதிப்பீட்டிலும் கட்ட ப்படவுள்ளது. விருப்பாட்சி பகுதியில் போக்குவரத்து பணி மனை கட்டப்படவுள்ளது.

    ஒட்டன்சத்திரம் மற்றும் இப்பகுதியில் உள்ள பேரூராட்சி, ஊராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கென ரூ.1000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, வரும் 31-ந் தேதி அதற்கான டெண்டர் விடப்படுகிறது. பணிகள் 15 மாத காலத்திற்குள் முடிவடையும்.

    இதற்கென புதிய 20 மீட்டர் உயரம் கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் நமது பகுதி மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்கும்.

    மேலும், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 3 இடங்களில் மக்கள் சாலைகளை கடக்க லிப்ட் வசதியுடன் நடைமேடை பாதை அமைக்கப்படும். ஒட்டன்சத்திரம் நகராட்சியை குப்பையில்லா நகராட்சியாக மாற்றும் வகையில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் குப்பை கிடங்கு அமைப்பட்டு குப்பைகள் தரம் பிரிக்கப்படவுள்ளது.

    மேலும் இங்கு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் ரூ.12 கோடியில் நடைபாதை பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானமும் அமைக்கப்படவுள்ளது.

    ஒட்டன்சத்திரம் பகுதியில் குற்றசெயல்களை தடுக்க அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவுள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 26 பணிகள் ரூ.47.65 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 2451 எல்.இ.டி விளக்குகள் புதியதாக அமைக்கப்ப டவுள்ளது.

    ஒட்டன்சத்திரம் அரசு பொது மருத்துவமனை ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி, நகர்மன்ற துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஒன்றியகுழு தலைவர் அய்யம்மாள், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சத்தியபுவனா ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×