என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100 பேர் கைது
- சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- தொடர்ந்து பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.21,000-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்.
சேலம்:
அகில இந்திய தொழிற்சங்க பேராயம், சேலம் மாவட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி தலைமை தாங்கினார்.
அப்போது, தொடர்ந்து பணிபுரிந்தால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.21,000-க்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும். ரூ.6,000-க்கு குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் விரோத கொள்கைகளையும், 4 சட்டத் தொகுப்புகளையும் கைவிட வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சேலம் மாவட்ட செயலாளர் மோகன், சி.பி.ஐ மாநில குழு ராமன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், கவிதா, மனோன்மணி உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்