search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில், 10-ந்தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
    X

    சேலத்தில், 10-ந்தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்

    • சேலம் மண்டல அளவில் வருங்கால வைப்பு நிதி குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி சேலம் இரும்பாலை சாலையில் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடக்கிறது.
    • மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மண்டல அளவில் வருங்கால வைப்பு நிதி குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி சேலம் இரும்பாலை சாலையில் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடக்கிறது. வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமை தாங்குகிறார்.

    கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி சாலையில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி சாத்தகிராமன் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. சந்தாதாரர்களுக்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தொழில் அதிபர்களுக்கு மதியம் 3 மணி முதல் 4 மணி வரையிலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 9-ந் தேதிக்கு முன்னதாக மாவட்ட அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும். அல்லது ro.salem@epfindia.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×