search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலூர்- கெடமலையில்  1 மாதம் மின் தடை பொது மக்கள், மாணவர்கள் பாதிப்பு
    X

    மேலூர்- கெடமலையில் 1 மாதம் மின் தடை பொது மக்கள், மாணவர்கள் பாதிப்பு

    • கீழூர், கெடமலை, மேலூர் என 3 கிராமங்கள் உள்ளன.இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு மின் வசதி செய்யப்பட்டிருந்தது.
    • 1 மாதமாக மின் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. கெட மலையில் 500 பேருக்கு மேல் வசிக்கின்றனர். அதேபோல் மேலூரில் 450 பேர் வசிக்கின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போத மலையில் கீழூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கீழூர், கெடமலை, மேலூர் என 3 கிராமங்கள் உள்ளன.இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு மின் வசதி செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மேலூர் மற்றும் கெடமலைப்ப குதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மர்கள் செயல்படவில்லை. இதனால் 1 மாதமாக மின் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. கெட மலையில் 500 பேருக்கு மேல் வசிக்கின்றனர். அதேபோல் மேலூரில் 450 பேர் வசிக்கின்றனர்.அங்குள்ள டிரான்ஸ்பார்மர்கள் சரிவர செயல்படவில்லை என்பதால் அங்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சரிவர மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை மலைப்பகுதியில் சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், பள்ளி மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போதமலையைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.

    இது பற்றி மின்வாரிய அதிகாரி கூறியதாவது:-

    சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை யால் கெடமலை மற்றும் மேலூர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை கீழே கொண்டு வருவதற்கு சாலை வசதி இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் உதவியுடன் தான் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை கீழே கொண்டு வர முடியும். புதிய டிரான்ஸ்பார்மர்கள் தயார் நிலையில் உள்ளது. அங்குள்ள மக்கள் ஒத்துழைப்பு தந்தால் உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர்களை அங்கு வைத்து மின் சப்ளை செய்ய முடியும். நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×