என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் திடீர் தற்கொலை
- காதலி பேச மறுத்ததால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள செம்பராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி மகன் சரத்குமார் என்கிற சரத் (வயது 27) வெல்டிங் வேலை செய்து வந்தார்.
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென அந்த இளம் பெண் சரத்குமாருடன் பேசியதை நிறுத்தினார்.
மீண்டும் தன்னை காதலிக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என சரத்குமார் கூறிவந்துள்ளார். இளம் பெண் அவரது காதலை ஏற்க மறுத்ததால் மனம் உடைந்த சரத்குமார் வீட்டில் தூக்கில் தொங்கினார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சரத்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருவலம் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






