search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிக பாதுகாப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்
    X

    அதிக பாதுகாப்பு வசதியுடன் விரைவில் அறிமுகமாகும் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ்

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. #jawamotorcycles



    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விரைவில் டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களில் பின்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    டூயல்-சேனல் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடல்களின் விலை சாதாரண மாடல்களை விட ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம். சமீபத்தில்  ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இரண்டு விற்பனையகங்கள் பூனேவின் பேனர் மற்றும் சின்ச்வாட் நகரங்களில் துவங்கப்பட்டது. 



    இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்குள் நாடு முழுக்க 105 விற்பனையகங்களை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஜாவா 42 மற்றும் ஜாவா என இரு மோட்டார்சைக்கிள் மாடல்களை முறையே ரூ.1.55 லட்சம் மற்றும் ரூ.1.64 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது. 

    இந்தியாவில் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மோட்டார்சைக்கிள்கள் தொடர்ந்து அறிமுகமாகி வருகிறது. அந்த வகையில் புதிய டூயல்-சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இரண்டு மோட்டார்சைக்கிள்களுடன் ஜாவா நிறுவனம் ஜாவா பெராக் என்ற மோட்டார்சைக்கிளை ரூ.1.89 லட்சம் விலையில் அறிமுகம் செய்தது.

    புதிய ஜாவா 42 மாடலில் 293சிசி லிக்விட்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்கியூ, 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புது என்ஜின் பி.எஸ். VI ரக எமிஷன் கொண்டிருக்கிறது. ஜாவா பெராக் மாடலில் 334சிசி என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×