search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் முதல் ஜாவா மோட்டார்சைக்கிள் விற்பனையகம் திறக்கப்பட்டது
    X

    இந்தியாவின் முதல் ஜாவா மோட்டார்சைக்கிள் விற்பனையகம் திறக்கப்பட்டது

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் முதல் விற்பனையகங்கள் பூனேவில் திறக்கப்பட்டது. #JawaIsBack

     

    ஜாவா பிரான்டு மோட்டார்சைக்கிள்கள் கடந்த மாதம் இந்திய சந்தையில் ரீ-என்ட்ரி கொடுத்தது. மூன்று புதிய மோட்டார்சைக்கிள்களை முதற்கட்டமாக அறிமுகம் செய்த்ருக்கும் ஜாவா அவற்றுக்கான முன்பதிவுகளை ஆன்லைனில் நடத்தி வருகிறது.

    புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களின் விநியோகம் அடுத்த ஆண்டு துவங்க இருக்கும் நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் இரண்டு விற்பனையகம் பூனேவின் பேனர் மற்றும் சின்ச்வாட் நகரங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிற்குள் நாடு முழுக்க 105 விற்பனையகங்களை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்யும் போதே ஜாவா நிறுவனம் இந்தியாவில் 105 விற்பனையகங்கள் மற்றும் 3எஸ் மையங்களை விற்பனை, சர்வீஸ் மற்றும் ஸ்பேர் உள்ளிட்டவற்றுக்கென திறக்க இருப்பதாக தெரிவித்தது.



    விற்பனையகங்கள் இயங்க துவங்கி இருக்கும் நிலையில், பூனேவில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்களை நேரடியாக முன்பதிவு செய்யலாம். 

    புதிய ஜாவா மோட்டார்டைக்கிள்களின் விநியோகம் ஜனவரி மாதத்தில் துவங்கும் என்றும், ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் ஜாவா விற்பனையாளர்களிடம் முன்பதிவு செய்வோர் தங்களது வாகனத்தை பெற சிலகாலம் காத்திருக்க வேண்டும்.

    இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் ஜாவா (ரூ.1.64 லட்சம்), ஜாவா ஃபார்டி டூ (ரூ.1.55 லட்சம்) மற்றும் பெராக் (ரூ.1.89 லட்சம்) என மூன்று மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், பெராக் மாடல் மட்டும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    Next Story
    ×