என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரம் உள்பட 3 தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
Byமாலை மலர்7 April 2021 8:11 AM GMT (Updated: 7 April 2021 8:11 AM GMT)
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் சி.முட்லூர் கருமாரி அம்மன் அரசு கலைகல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சிதம்பரம்:
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி ஆகிய 3 தொகுதிகளிலும் நேற்று இரவு 7 மணி அளவில் வாக்குப்பதிவு முடிந்ததும். வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் சீல்வைத்தனர்.
அதன் பின்னர் அந்த 3 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் பகுதியில் உள்ள கருமாரி அம்மன் அரசு கலைகல்லூரிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அந்த கல்லூரியில் உள்ள அறைகளில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கருமாரி அம்மன் அரசு கலை கல்லூரிக்கு கடலூர் மாவட்ட கலெக் டர் சந்திரசேகர சாகமூரி, சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் சி.முட்லூர் கருமாரி அம்மன் அரசு கலைகல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்த கல்லூரி வளாகத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த கல்லூரி வளாகத்தில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கபட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், புவனகிரி ஆகிய 3 தொகுதிகளிலும் நேற்று இரவு 7 மணி அளவில் வாக்குப்பதிவு முடிந்ததும். வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் சீல்வைத்தனர்.
அதன் பின்னர் அந்த 3 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் இருந்து சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் பகுதியில் உள்ள கருமாரி அம்மன் அரசு கலைகல்லூரிக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அந்த கல்லூரியில் உள்ள அறைகளில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த கருமாரி அம்மன் அரசு கலை கல்லூரிக்கு கடலூர் மாவட்ட கலெக் டர் சந்திரசேகர சாகமூரி, சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் சி.முட்லூர் கருமாரி அம்மன் அரசு கலைகல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 24 மணிநேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்த கல்லூரி வளாகத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த கல்லூரி வளாகத்தில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கபட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X