search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்
    X
    ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

    புதுவை தேர்தல் நிலவரம்... 3 மணி வரை 62.32 சதவீத வாக்குப்பதிவு

    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் வாக்காளர்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சமூக இடைவெளி விட்டும், வாக்குச்சாவடி மையத்தில் கூட்டம் கூடாமல் வாக்களிப்பதற்காகவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

    மதியம் ஒரு மணி  நிலவரப்படி புதுச்சேரியில் 53.01% வாக்குகள் பதிவாகியிருந்தன. புதுச்சேரியில் 53.30%, காரைக்காலில் 52.14%, மாஹேயில் 44.28%, ஏனாமில் 54.90% வாக்குகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது 

    3 மணி நிலவரப்படி 62.32 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏனாமில் 72.26 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. புச்சேரியில் 63.63 சதவீதம், காரைக்காலில் 55.48 சதவீதம்,  மாகேயில் 55.38 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
    Next Story
    ×