என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி
    X
    ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி

    எதிர்க்கட்சியினரின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள்- ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரம்

    10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போதும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஓசூர் தொகுதிக்குட்பட்ட மத்திகிரி, கொத்தூர், டி.வி.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் கட்சி நிர்வாகிகளுடன் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போதும், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் உறுதியாக நிறைவேற்றப்படும். தமிழகத்தில் மீண்டும் அதி.மு.க. ஆட்சி மலர ஆதரவு தாருங்கள். வாக்காளர்கள் எதிர்க்கட்சியினரின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள். ஓசூர் தொகுதி மேலும் முன்னேற்றம் அடைய இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுங்கள் என்று பேசினார்.

    வேட்பாளருடன், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓசூர் மாநகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பி.ஆர்.வாசுதேவன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், மாநகர அவைத்தலைவர் முத்துராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் ராமு மற்றும் அ.தி.மு.க. மற்றும், கூட்டணி கட்சியினர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.
    Next Story
    ×