என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

கோப்புப்படம்
தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க கிருஷ்ணகிரி விவசாயிகள் முடிவு
வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போடாமல், நோட்டாவுக்கு ஓட்டு போடுவது என முடிவு செய்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி, வேலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தேனி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக படையெடுத்து, விவசாயத்தை நாசமாக்கி வருகிறது. பயிர் சேதம், உயிர் சேதம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.
வன விலங்குகள் பிரச்சனைகளுக்கு, இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கையில், வனவிலங்கு பிரச்சனை தீர்வுக்கு எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போடாமல், நோட்டாவுக்கு ஓட்டு போடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தேன்கனிக்கோட்டை சார்பில், தேன்கனிக்கோட்டை பகுதியில், விவசாயிகளின் ஓட்டு நோட்டாவுக்கு என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கிருஷ்ணகிரி, வேலூர், கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தேனி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக படையெடுத்து, விவசாயத்தை நாசமாக்கி வருகிறது. பயிர் சேதம், உயிர் சேதம் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.
வன விலங்குகள் பிரச்சனைகளுக்கு, இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. அரசியல் கட்சிகள், தங்களது தேர்தல் அறிக்கையில், வனவிலங்கு பிரச்சனை தீர்வுக்கு எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு போடாமல், நோட்டாவுக்கு ஓட்டு போடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், தேன்கனிக்கோட்டை சார்பில், தேன்கனிக்கோட்டை பகுதியில், விவசாயிகளின் ஓட்டு நோட்டாவுக்கு என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
Next Story






