என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

கந்தர்வக்கோட்டை தொகுதி
கந்தர்வக்கோட்டை தொகுதி கண்ணோட்டம்
தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு புதிதாக உருவான கந்தர்வக்கோட்டை தொகுதியில் இரண்டு முறையும் அதிமுக-வே வெற்றி பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்த்தில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், ஆலங்குடி, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு புதிதாக கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி உருவான நிலையில் புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி என்ற தகுதியை புதுக்கோட்டை மாவட்டம் இழந்தது.

கந்தர்வக்கோட்டை புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்தபோது நடைபெற்ற தேர்தல் விபரம்:-
1989- தி.மு.க. வெற்றி
1991- காங்கிரஸ் வெற்றி
1996- தி.மு.க. வெற்றி
1997- இடைத்தேர்தல் தி.மு.க. வெற்றி
2001- அ.தி.மு.க. வெற்றி
2006- அ.தி.மு.க. வெற்றி
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி (தனி) யான பிறகு நடைபெற்ற 2011 மற்றும் 2016 சட்டமன்ற தொகுதி தேர்தல்களில் அ.தி.மு.க.வே தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. 2011 தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க.வை சேர்ந்த சுப்பிர மணியன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, குண்றான்டார் கோவில் ஒன்றியங்கள் உள்ளடங்கிவை ஆகும்.

கடந்த 2019-ம் ஆண்டு கஜா புயல் தாக்கியபோது இந்த தொகுதியே உருக்குலைந்து போனது. பல ஆயிரம் ஏக்கரில் தென்னை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. இந்த தொகுதிக்குள் வந்து சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விரைவில் மக்களுக்கு தீர்வு கிடைக்க முயற்சி மேற்கொள்வேன் என்று கூறிச்சென்றார்.
கந்தர்வகோட்டை தொகுதியை பொறுத்தவரை ஏராளமான கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவே பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இருந்தபோதிலும் வரும் ஆட்சி தொகுதிக்கு நல்லாட்சியை தரும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
இந்த தொகுதியில் வாக்காளர்கள் விபரம்:-
ஆண் வாக்காளர்கள் 1,00,810 பேர், பெண் வாக்காளர்கள் 1,00,241 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தம் 2,01,071 பேர் உள்ளனர்.
கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் கந்தர்வக் கோட்டை சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பேருந்து பணிமனை, நீதிமன்றம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பலன்களை தொகுதி மக்கள் பெற்றுள்ளனர்.
கோரிக்கைகள்
கந்தர்வக்கோட்டை பகுதியில் அதிகம் விளையும் பணப்பயிரான முந்திரிக்கு அரசு தொழிற்சாலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
சமீபத்தில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் கந்தர்வக்கோட்டை பகுதிக்கு காவேரி தண்ணீர் கிடைக்குமா, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது பொதுமக்களின் சந்தேகமாக இருந்து வருகிறது.
Next Story






