என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

கே.வி. குப்பம் தொகுதி
கே.வி. குப்பம் தொகுதி கண்ணோட்டம்
தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு காட்பாடி தொகுதி மற்றும் குடியாத்தம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகள் இணைத்து உருவாக்கப்பட்ட கே.வி.குப்பம் தொகுதி கண்ணோட்டம்.
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையோரம் உள்ள அதிக கிராமங்களை கொண்டது கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி. தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு காட்பாடி தொகுதி மற்றும் குடியாத்தம் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட பகுதிகள் இணைத்து கே.வி.குப்பம் (தனி) தொகுதி உருவாக்கப்பட்டது.
மகாதேவமலை கோவில், ராஜாதோப்பு அணை, விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையம் ஆகியவை இந்த தொகுதியின் அடையாளமாக உள்ளது.
தனகொண்டப்பள்ளி, விலுதோனபாளையம், தட்சிணபதபாளையம், ரெங்கசமுத்திரம், பரதராமி, புட்டவாரிபள்ளி, செங்குன்றம், கோடிகுப்பம், தட்டப்பாறை, சின்னாளபள்ளி, முக்குன்றம், பாக்கம், ராமாலை, தத்திமாணபள்ளி, கல்லபாடி, கொண்டசமுத்திரம், பிச்சனூர், ராஜகுப்பம், நெல்லூர்பேட்டை, செருவங்கி, தாழையாத்தம், செதுக்கரை, மேலாலத்தூர், மேல்முட்டுக்கூர், செட்டிக்குப்பம், போஜனபுரம், செம்பேடு, சிங்கல்படி, கூடநகரம், அனங்காநல்லூர், கொத்தகுப்பம், பட்டு, ஒலகாசி மற்றும் சித்தாத்தூர் கிராமங்கள்.

காட்பாடி வட்டம் (பகுதி), தொண்டான்துளசி, செஞ்சி, பனமடங்கி, மாளியப்பட்டு, மேல்மாங்குப்பம், மேல்மாயில், கீழ்முட்டுக்கூர், காளாம்பட்டு, அரும்பாக்கம், லத்தேரி, விளுந்தக்கல், ஜாபராபேட்டை, வஞ்சூர், ஒழையாத்தூர், அனங்குடி, பொம்மிநாயக்கன்பாளையம், அங்காரன்குப்பம், அலங்கனேரி, முருக்கம்பட்டு, காங்குப்பம், தேவரிஷிகுப்பம், நாகல், கீழ் ஆலத்தூர், சேத்துவண்டை, அம்மணாங்குப்பம், வேப்பூர், நெட்டேரி, பசுமாத்தூர், சென்னாங்குப்பம், மாச்சனூர், பழையகிருஷ்ணாபுரம், காவனூர், கீழ்வைத்தியணான்குப்பம், வேப்பங்கணேரி, துத்திதாங்கல், மேல்விலாச்சூர், பில்லாந்திபட்டு, மேலூர், கீழுர், முதினாம்பட்டு, கீழ்விலாச்சூர், வடுகன் தாங்கல், விக்ரமாச்சி, வேலம்பட்டு, வாழ்வான்குன்றும், வடவிரிஞ்சிபுரம், கொத்தமங்கலம், சோழமூர் மற்றும் திருமணி கிராமங்கள் இந்த தொகுதியில் அடங்குகிறது.
இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 24,230 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,09,836 பேர், பெண்கள் 1,14,389 பேர், மூன்றாம் பாலினத்தினர் 5 பேர் உள்ளனர்.
இந்த தொகுதியில் ஆதி திராவிடர்கள், வன்னியர், நாயுடு சமூகத்தினர் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். ரெட்டியார், அருந்ததியினர் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர்.
2011-ல் முதல் தேர்தலை கே.வி. குப்பம் (தனி) சந்தித்தது. அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.க்களின் முதல் சட்டப் பேரவையின் தற்காலிக சபாநாயகராக செ.கு. தமிழரசன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க கிராமங்களை மட்டுமே கொண்ட மிக மிக பின்தங்கிய தொகுதியாகும். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. 10-க்கும் மேற்பட்ட பொறி உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. அதிகளவில் மாம்பழம் விளைச்சல் உள்ளது.
தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்
இந்த தொகுதி மக்களுக்கு வடுகன்தாங்கல் மற்றும் லத்தேரியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும். வேலூர் மாவட்டம் முழுவதும் செயல்படுத்திய காவிரி குடிநீர் திட்டத்தில் புறக்கப்பட்ட கே.வி.குப்பம் ஒன்றியத்தை இணைக்க வேண்டும். கே.வி.குப்பத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். வடுகன்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

மோர்தானா அணையில் இருந்து ராஜாதோப்பு அணைக்கு கட்டப்பட்ட கால்வாயை சரி செய்து வேப்பனேரி, பில்லாந்திப்பட்டு, சின்ன வடுகன்தாங்கல், வடுகன்தாங்கல், பி.என்.பாளையம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் திட்டங்கள், கால்நடை மற்றும் கோழி வளர்ப்புக்கு சிறப்பு திட்டங்கள், சாலை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Next Story






