search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உண்ட மயக்கம் வருகிறதா
    X
    உண்ட மயக்கம் வருகிறதா

    மருத்துவம் அறிவோம் - உண்ட மயக்கம் வருகிறதா?

    மருத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் உண்ட மயக்கம்  வருகிறதா? என்பது குறித்து டாக்டர் கமலி ஸ்ரீபால் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
    உண்ட மயக்கம்: பலரும் கூட அதிகம் கனமான உணவினை உண்ட பிறகு பேசக் கூட முடியாத ஒரு மயக்கத்தில் - அதாவது நல்ல தூக்கத்தில் இருப்பர்.

    * தூக்கம் * சுறுசுறுப்பின்மை * உடல் ஆபீசில் வேலை செய்ய மறுப்பது * சக்தியின்மை போல் இருப்பது * கவனம் செலுத்த முடியாத ஓர் உணர்வு இப்படி இருக்கும்.

    இதற்கு மிகப்பெரிய அளவில் எந்த ஆய்வு களும் செய்யப் படவில்லை. நம் முன்னோர் இதனை “உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு” எனக்கூறியுள்ளனர்.

    பொதுவில் அதிக உழைப்பு, மனஅழுத்தம் சமயங்களில் மூளைக்குத் தேவையான அளவு ரத்த ஓட்டம் சற்று குறைகின்றது. உடற்பயிற் சிக்கு செய்யும் போது உடலின் தசைகளுக்கு அதிக ரத்த ஓட்டம் தேவைப்படுகின்றது அல்லவா? அதுபோலத்தான் குடலுக்கு சற்று கூடுதல் உணவு எடுத்துக் கொள்ளும் பொழுது சற்று கூடுதலான ரத்த ஓட்டமும் திருப்பி விடப்படுகின்றது. இதனால் மூளை யின் சுறுசுறுப்பு சற்று குறைவதன் மூலம் தூக் கத்தினை ஏற்படுத்தி விடுகின்றது என்பது சில ஆய்வுகளின் விடையாகும்.

    மேலும் சில ஆய்வுகள் கூறுவது, காலை உணவை தவிர்த்து மதிய உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கும் இவ்வாறு ஏற்படுவதாகக் கூறுகின்றனர். அதிக உப்பு, மிக அதிக புரத உணவு எடுத்துக் கொள்ளும் போதும் சோர்வு, தூக்கம், சோம்பல் போன்றவை அடுத்த 4 மணி நேரம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டு உள்ளது. அதிக உணவு உண்டு வண்டி ஓட்டுபவர்கள் சற்று தடுமாறும் நிலை ஏற்படுவதாக வும் கூறப்பட்டு உள்ளது.

    அதிக கார்போஹைடிரேட், அதிக கொழுப்பு, அதிக புரதம் இவை மூன்றுமே உண்ட மயக்கத் திற்கு காரணம் ஆகின்றன. கார் போஹைடிரேட் உணவு கூடும் போது உடலில் செரடோனின் ஹார்மோன் கூடி தூக்கத்தினை ஏற்படுத்தி விடுகின்றது.

    * கோழி, முட்டை, சீஸ், மீன், பால், சோயா புரதம் இவைகளை அதிக அளவில் உட்கொண் டால் உண்ட மயக்கம் ஏற்படுகின்றது.

    * அதிக கொழுப்பு உணவு சோர்வினை ஏற்படுத்தி விடு கின்றது. உணவு மூலம் ஹார் மோன், வீக்கம் அளிக்கும் புரதம், கனமான உணவுகள் இவை தூக்கத்தினை ஏற்படுத் துவதாக கூறப்படுகின்றது.

    பொதுவில் உணவு உண்ணப்படும் போது வெளியாகும் ஹார்மோன்கள், செரிமானத் திற்கும் பொறுப்பாகின்றன. இவை தூக்க வழிக்கான முறை முந்தும் போது சோர்வு, தூக்கம் போன்றவை ஏற்படுகின்றன. குறிப் பிட்ட ஹார்மோன்கள் உணவு நேரத்தில்சுரப்ப தும், குறைவதும் தூக்கத்தினை பாதிக்கின் றன. ஹார்மோன் ஒரெக்சின் என்பது பசி, விழிப்புணர்வினைத் தூண்டுவது. இதுஉணவு உண்ட பின் சுரக்காது.

    ஹார்மோன் மெலடோனின் தூக்கத்தினை ஏற்படுத்துவது. இது உணவு உண்ட பின் கூடுகின்றது.

    உடல் கடிகார முறையின்படி இயங்குகின் றது. அதன்படி பார்க்கும்போது மதியம் 2-4 மணி அளவில் ஒருவரின் வேலை திறன் சற்று குறைவ தாகவும், விபத்துகள் இந்த நேரத்தில் கூடுதலாக இருப்ப தாகவும் கூறப்படு கிறது. அதனாலேயே மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் பல நாடுகளில் பழக்கத் தில் உள்ளது. அப்படி என்றால் படுக் கையில் படுத்து நன்கு தூங்கு வது அல்ல. ஒரு சாய்வு நாற்காலியில் ½ மணி நேரம் கண்மூடி ஓய்வில் இருந்தாலும் நல்ல பலனைப் பெறுகின்றனர்.

    இதனைப் பற்றிய மிகப்பெரிய ஆய்வுகள் அதிகம் நடைபெற வில்லை என்றாலும் இந்த “உண்ட மயக்கம்” மிகப்பெரிய பிரச்சினையாக பார்க் கப்படுவதில்லை. உடலின் இயற்கை நிகழ்வாக பார்க்கின்றனர். ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாவு சத்து, சர்க் கரை இவை உண்டபின் அதிக சோர்வு ஏற்படு கின்றது. சர்க்கரை கூடும் போதும், குறையும் போதும் ஏற்படும் சோர்வு, தூக்கம் இவை உடனடி கவனம் பெற வேண்டியவை ஆகும்.

    இந்த உண்ட மயக்கம் பணிபுரிபவர்களுக்கும், மாணவர்களுக்கும் இருப்பது அவர்களது பணிக்கு இடையூறாக இருக்கும். இதனைத் தவிர்க்க

    * வயிறு முட்ட முட்ட உண்ணாமல் ½ வயிறு உண்ணலாம். அதில் சத்தான உணவினை விகிதாச்சார முறையில் உட்கொள்ளலாம். உடலில் நீர் சத்து குறையாமல் இருந்தாலே சோர்வு ஏற்படாது. மூளை சீராக வேலை செய் யும். இரவு தூக்கம் 7-8 மணி நேரம் இருந் தால் பகல் பொழுதில் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

    முடிந்தால் வயது சற்று கூடியவர்கள் மதிய உணவிற்குப் பிறகு 30 நிமிட ஓய்வு எடுக்க லாம். இதனை சாய்வு நாற்காலியில் சாய்ந்து எடுப்பது நல்லது.

    கண்டிப்பாக அன்றாடம் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர்கள் அதிக சுறுசுறுப்புடன் இருக்கின்றனர்.

    * சர்க்கரை நோய் * ஒவ்வாமை * ரத்த சோகை * தைராய்டு பிரச்சினை * குடல் சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் உணவுக்குப் பின் சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதனை அறிய வேண்டும்.

    இவை அனைத்திற்கும் சிறந்த ஒரு தீர்வு உண்டு என்றால் அது ஆரோக்கியமான முறை யில் உணவு பழக்கமும் இருப்பது முக்கியம் ஆகின்றது. * பழங்கள் * காய்கறிகள் *பருப்பு வகைகள் * முழு தானியங்கள் * கொட்டைகள் விதைகள் * முட்டை, பால் சார்ந்த உணவுகள் * அசைவ புரதம் என எத்தனை பிரிவுகளில் மனிதனுக்கு நல்ல உணவு கிடைக்கின்றது. இவை நார்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி, குடலின் நண்பன் என்பதால் உடல் பருமன் சர்க்கரை நோய் போன்ற பல நோய் களை தவிர்த்து விடுகின்றது.

    தடாலடியாக எடையை குறைப்பது உடனடி யாக எடை குறைவதுபோல் தெரியலாம். ஆனால் இது ஆரோக்கியமானதும் அல்ல. நிரந்தர தீர்வும் அல்ல.

    உணவு நிபுணர்களின் அறிவுரைப்படி அவரவர் உணவுப் பழக்கத்தினை மாற்றிக் கொள்வது சரியான பலன் தரும்.

    * வீட்டில் ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே இருந்தால் ஒருவருக்கு பிரச்சினையே இருக்காது.

    * சாலட், பழ வகைகள், கொட்டை, விதை வகைகளை அவ்வப்போது கொரிப்பதற்குக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

    * அடுத்த வேளை உணவை முதலிலேயே திட்டமிட்டுக் கொண்டால் சரியான உணவு முறை ஏற்படும்.

    * அன்றாடம் உடலின் எடை, ஆரோக்கியம் இவற்றினை சில நிமிடங்களாவது கவனிக்க வேண்டும்.

    சரியாக எதனையும் செய்யும் பொழுது நிகழ்வுகளும் சரியாகவே இருக்கும்.

    இன்று எத்தனையோ வகையான சத்து மாத்திரைகள் வந்துள்ளன. ஆனால் மீன் எண்ணை மாத்திரைகளைப் பற்றி அறிந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு உடனே எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விடு வீர்கள். இவை விஞ்ஞான ரீதியாக நிரூபிக் கப்பட்டவை.

    * மீன் எண்ணை ஞாபக சக்தி யினைக் கூட்டுகின்றது.

    * மீன் எண்ணை உடல் எடை குறைக்க ஒருவர் செய்யும் உடற் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவற்றின் பலனை வேகமாக கூட்டும்.

    * மீன் எண்ணை ஒருவரின் மனநிலையினை உற்சாகமாக வைக்க உதவுகின்றது.

    * கண்களின் பார்வைத்திறனை பாதுகாக் கின்றது.

    * மன உளைச்சலை நீக்கு கின்றது.

    * நோய் எதிர்ப்புச் சக்தியினைக் கூட்டு கின்றது.

    * சருமப்பொலிவினைக் கூட்டுகின்றது.

    இப்படி அள்ளி பலன் தரும் மீன் எண்ணை மாத்திரைகளை மருத்துவ ஆலோசனைப் பெற்று பயன்படுத்தலாமே. ஒமேகா 3 பற்றி அதிகம் பேசும் நாம் மருத்துவ ஆலோசனை மூலம் இதனை பயன்படுத்தலாமே.

    எந்த ஒரு சத்து மாத்திரையினையும் கூட மருத்துவ ஆலோசனை என ஏன் வலியுறுத்தப் படுகின்றது. டாக்டர்களை விட சிறந்த திறமை சாலிகளாக பலரும் தங்களை நினைத்துக் கொண்டு மருந்தினை தங்கள் மனம் போனபடி எடுத்துக் கொள்கின்றனர். கல்லீரல், சிறு நீரகம், உணவுக் குழாயில் பெரிய பாதிப்பு கள் ஏற்படுவதனை தவிர்க்கவே இவ் வாறு வலியுறுத்தப்படுகின்றது. மருத்துவமும், ஆன்மீகமும் இணைந்து உணர்த்தும் செய்தி என்ன?

    மருத்துவ முன்னேற் றத்தின் மூலம் இன்று பயன்பெற்று தரமான வாழ்வினை மேற் கொள் பவர்கள் எண் ணிக்கை உலகெங்கிலும் மிக அதிக அளவில் உள் ளது. இது மனிதன் உழைப்பின் கண்டு பிடிப்புகளின் வரம்தான். ஆயினும் சிலர் இளம் வயதி லேயே சட்டென உயிர் இழந்து விடுகின்றனர். பலர் நீண்ட காலம் படுத்த படுக்கையாக, மரணத்தோடு அன்றாடம் போராடி வாழப்பிடிக்காமல் வாழ்நாளை கடத்துகின்றனர். எல்லோருக்கும் தகுந்த சிகிச்சையினை அளித்தாலும் இவை அனைத்தையும் தாண்டி ஏதோ ஒன்றுதன் கணக்குபடி இயங்குகின்றது. மனிதனும் அதன்படியே இயங்குகின்றான்.

    பொதுவில் பெரியவர்கள் வீட்டில் சொல் வார்கள். ஒரு மனிதன் பிறக்கும் பொழுதே. அவனது ஆயுள் நிர்ணயித்துடனே பிறக்கின் றான் என்று. இதுவும் சரியே என்று தான் தோன்றும்.

    மனிதனின் கடமை மருத்துவ அறிவுடன் உடல் நலத்தினை காப்பதும், ஆன்மீக துணை கொண்டு மனநலத்தினை காப்பதும் வாழ்வின் முறை என்று தோன்றும். ஆன்மீக முறை என்பதனை கடவுள், பக்தி என்பதனைக் கொண்டு வழிபடுவது மட்டுமே அல்ல. ஒரு தனி மனிதனின் ஒழுக்கம், சுயகட்டுப்பாடு போன்றவைகளும் இங்கு உயரிய மரியாதையினைப் பெறுகின்றன.

    என் சிந்தனையில் அவரவர் கர்ம வினைப் படியே எதுவும் நடக்கின்றது என்ற எண்ணம் கொண்டவன். அடுத்தவரது மாற்று சிந்தனை களையும், எண்ணங்களையும் பெரிதும் மதிக் கின்றேன்.

    ஆன்மீகம் என்பது தொலை நோக்கு பார்வை. உள் முகமான திரும்பிய பார்வை, வாழ்வின் மதிப்புகளை ஒருவருக்குத் தரு கின்றது. விஞ்ஞானம் என்பது வாழ்வின் முன் னேற்றத்திற்கான கருவியும், கண்டு பிடிப்பு களையும் தந்து விடுகின்றது.

    சுவாசத்தினை கவனியுங்கள்-ஆயுள் கூடும்.

    வார்த்தைகளை கவனித்தால்-மதிப்பு கூடும்.

    செயலை கவனித்தால் -நிதானம் கூடும்.

    எண்ணங்களை கவனித்தால்-வெற்றிகள் கூடும்.

    (எங்கோ படித்தது)
    Next Story
    ×