search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண் மூடித்தனமாக ஓட்டு போட்ட மக்கள்தான் முதல் குற்றவாளி - தமிழருவி மணியன்
    X

    கண் மூடித்தனமாக ஓட்டு போட்ட மக்கள்தான் முதல் குற்றவாளி - தமிழருவி மணியன்

    கண் மூடித்தனமாக ஓட்டு போட்ட மக்கள்தான் முதல் குற்றவாளி என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். #Vote #TamilaruviManian

    ஈரோடு:

    ஈரோடு சி.கே.கே. அறக்கட்டளை சார்பில் ஈரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் சி.கே.கே. அறக்கட்டளையின் 40- ஆண்டு இலக்கிய விழா நடந்தது.

    விழாவில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    வெளி நாட்டில் வாழும் தமிழ் மக்கள் இலக்கிய சிந்தனையை நேசிக்கிறார்கள். அதே போல் நாமும் இலக்கியத்தை நேசிக்க வேண்டும்.

    இன்று பெண்கள் பெரும் பாலானோர் டி.வி. சீரியல்களை நேசிப்பதால் அவர்களின் சிந்தனை அழிந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகளை குற்றம் சொல்வதை விட பெரிய குற்றம் அவர்களுக்கு கண் மூடித்தனமாக ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கும் நம்ம தான் (பொதுமக்கள்) குற்றவாளிகள்.

    இளைய தலைமுறையினர் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கற்று கொள்ள வேண்டும். இதன் மூலம் பல நல்ல சிந்தனைகளை வளர்த்து கொள்ளலாம்.

    இலக்கியம் தொடர்பான விழாக்கள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். அப்போது தமிழ் இலக்கியங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் தமிழும், மனித நேயமும் வளரும்.

    இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.  #Vote #TamilaruviManian

    Next Story
    ×