search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கிய வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட நீதிபதிகளை இனி நியமிக்க வேண்டும்- ஈஸ்வரன்
    X

    முக்கிய வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட நீதிபதிகளை இனி நியமிக்க வேண்டும்- ஈஸ்வரன்

    முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட நீதிபதிகளை இனி நியமிக்க வேண்டும் என்று ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். #Eswaran #18MLAsCase
    ஈரோடு:

    கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரண்டு நீதிபதிகள் மறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். இந்த தீர்ப்பு பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொதுவாக இது போன்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிப்பதற்கு பதில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் விசாரிப்பதே சரியானதாக இருக்கும்.

    ஏன் என்றால் நேற்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புப்படி இந்த வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. இதனால் தேவையில்லாத கால விரயம், பண விரயம் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக வரும் காலங்களில் இது போன்ற வழக்குகளுக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எல்.எல்.ஏ.க்களும் தாங்கள் தொடர்ந்த வழக்குகளை திரும்ப பெற்று தேர்தலை சந்திக்க வேண்டும். இதன் மூலம் மக்கள் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது? என்பது தெரிந்து விடும்.

    நடிகர் ரஜினி புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்து உள்ளார். ஆனால் திடீரென காலா படத்தில் நடித்து முடித்தார். இப்போது மற்றொரு புது படத்தில் நடிக்க சென்று விட்டார். இன்னும் 2 மாதம் கழித்து தான் வருவார்.

    அதே போன்று நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கினார். அவ்வப்போது அறிக்கை, டுவிட்டர் மூலம் கருத்துகளை கூறி வந்தார். தற்போது பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டார். இவ்வாறு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளனர். மக்களை இவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். எனவே தமிழ்நாட்டு மக்கள் நடிகர்கள் ரஜினியையும், கமல்ஹாசனையையும் ஏற்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Eswaran #18MLAsCase

    Next Story
    ×