search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - சட்டசபையில் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு
    X

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - சட்டசபையில் அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

    சட்டசபையில் இன்று பேசிய அமைச்சர் தங்கமணி, டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு விவரங்களை அறிவித்தார். #TasmacSalaryHike #TNassembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

    110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 83 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 104 அறிவிப்புகளுக்கான பணிகள் நடக்கின்றன.



    தமிழக அரசின் கொள்கை பூரண மதுவிலக்கு என்பதுதான். தற்போது 3,866 மதுக்கடைகள் உள்ளன. படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

    டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.750  சம்பள உயர்வு அளிக்கப்படும். டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.600, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.500 என்ற விகிதத்தில் சம்பள உயர்வு வழங்கப்படும்.

    தமிழகத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து மின் இணைப்பை பெறும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரே நாளில் 3 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார். #TasmacSalaryHike #TNassembly

    Next Story
    ×