search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன, மலைப்பிரதேசங்களில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு
    X

    வன, மலைப்பிரதேசங்களில் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படும் - சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

    தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள வன மற்றும் மலைப்பிரதேசங்களில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #TNAssembly #TNCM
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று வனத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது ஆத்தூர் எம்.எல்.ஏ. சின்னத்தம்பியின் கேள்விக்கு பதிலளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    அப்போது, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் உள்ள வன மற்றும் மலைப்பிரதேசங்களில் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார். மாவட்ட அளவில் ஆய்வு செய்து ஆய்வறிக்கை பெற்று மலைப் பிரதேசங்களில் உள்ள தேவைகளை கண்டறிந்து மத்திய அரசு உதவியுடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    முன்னதாக பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சேலம் மாவட்டம் சங்ககிரி, எளம்பிள்ளை சித்தர் மேல்மலை கோவிலுக்குச் செல்ல மலை மீது புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதேபோல் கொல்லிமலை பகுதியில் 5 கி.மீ. தொலைவுக்கு மண் சாலைகளை தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.



    இதேபோல் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு எம்.எல்.ஏ.க்கள் பாராட்டு தெரிவித்தனர். #TNAssembly #TNCM

    Next Story
    ×