search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேர்காணல் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு
    X

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நேர்காணல் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு

    மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கு வருகிற 25-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யத்தின் கட்சிக்கு புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்காணல் சென்னையில் நடைபெற உள்ளது. இயக்கம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பற்றிய அனைத்து தகவல்களும் வருகிற 20-ந் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மாவட்டவாரியாக நேர்காணல் நடைபெறும் விவரம் வருமாறு:-

    வடக்கு மண்டலம்: 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை)- சென்னை (தெற்கு, வடக்கு, மத்திய), காஞ்சீபுரம், திருவள்ளூர். 26-ந் தேதி (சனிக்கிழமை)- திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம். மேற்கு மண்டலம்: 26-ந் தேதி (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர். 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி.

    கிழக்கு மண்டலம்: 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல். 28-ந் தேதி (திங்கட்கிழமை) புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம். தெற்கு மண்டலம்: 28-ந் தேதி (திங்கட்கிழமை) மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர். 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி. 30, 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைத்தல், சமர்ப்பித்தல் நடைபெறும்.

    அனைத்து உயர்நிலைக்குழு உறுப்பினர்களும் 25-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×