என் மலர்
கர்நாடகா தேர்தல்

சிவமொக்காவில் ராகுல்-பிரியங்கா காந்தி ஒரே மேடையில் பிரசாரம்
- காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரியங்கா காந்தி சிவமொக்கா மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
நேற்று பிரியங்கா காந்தி சிக்கமகளூரு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். இன்று(வியாழக்கிழமை) அவர் சிவமொக்கா மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். அப்போது ராகுல்காந்தியும் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சிவமொக்காவுக்கு வந்து பிரியங்கா காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இதற்காக ராகுல்காந்தி இன்று மதியம் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சிவமொக்காவுக்கு வருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை தொண்டர்கள் உள்பட யாரும் சந்திக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.






