என் மலர்tooltip icon

    கர்நாடகா தேர்தல்

    கர்நாடகா தேர்தல்  - காந்திநகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் போட்டி
    X

    ஓ.பன்னீர்செல்வம்

    கர்நாடகா தேர்தல் - காந்திநகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் போட்டி

    • ஓபிஎஸ் சார்பில் புலிகேசி நகர், கோலார் தங்கவயல், காந்தி நகர் தொகுதிகளுக்கு வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
    • புலிகேசி நகர், கோலாரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவராக உள்ளார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு போட்டியாக அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வமும் தனது அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

    ஓபிஎஸ் தரப்பு சார்பில் புலிகேசி நகர் மற்றும் கோலார் தங்கவயல் தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

    இதில் அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அன்பரசனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ். தரப்பில் கோலார் தங்க வயல், புலிகேசி நகர் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவின் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த மனுவை அதிமுக பெயரில் தேர்தல் ஆணையம் ஏற்றது.

    ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்த ஆனந்தராஜ் கோலார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    Next Story
    ×