என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
பெண்கள் வழிப்பறியில் இருந்து சமயோசிதமாக தப்பிப்பது எப்படி?
Byமாலை மலர்18 May 2021 8:26 AM GMT (Updated: 18 May 2021 8:26 AM GMT)
சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்தே வழிப்பறி நடக்கிறது. வழிப்பறி காரணமாக பாதிக்கப்படாமலிருக்க சமயோசிதமாக செயல்படுவது எப்படி என்று பார்க்கலாம்.
தேசிய அளவில் அதிகரித்து வரும் குற்றச்செய்ல்களில் வழிப்பறிகள்தான் முதலிடத்தில் உள்ளது. சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்தே வழிப்பறி நடக்கிறது. அதில் நகையை பறிகொடுப்பதுடன் பலவகையிலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தவறு நடந்த பின்னர் வருத்தப்படுவதை விட முன்னரே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது காவல் துறையினரின் அறிவுரையாகும்.
வழிப்பறி காரணமாக பாதிக்கப்படாமலிருக்க சமயோசிதமாக செயல்படுவது எப்படி என்று பார்க்கலாம்.
* வெளியிடங்களுக்கு செல்லும்பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.பொது இடங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பதுடன். அதிகமாக போன் பேசுவது அதனுள் மூழ்கியபடி நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது அவையும் வழிப்பறிக்கு காரணமாக அமையக்கூடும்.
* பணத்தை பொது இடங்களில் வைத்து எண்ணக்கூடாது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதிலும் எச்சரிக்கை வேண்டும்.
* இரவு நேரத்தில் தனியாக வீட்டிற்கு செல்லும் நிலையில் மக்கள் நடமாட்டம் உள்ள வழியில் தான் செல்ல வேண்டும். அதேபோல் இரவு நேரத்தில் வாகனத்தில் தனியாக செல்ல நேர்ந்தால் வெளிச்சமான பகுதியிலோ, போலீஸ் நடமாட்டம் உள்ள பகுதி வழியாகவோ செல்ல வேண்டும்.
* வாகனத்தை நிறுத்தும் போது தனியாக நிறுத்தாமல் மற்ற வாகனங்கள் இருக்கும் இடத்திலேயே நிறுத்த வேண்டும்.
* வீதியில் நடந்து செல்லும் போது செல்போன் அரட்டை காரணமாக கவனக்குறைவு ஏற்பட்டு பின் தொடரும் நபர்கள் குறித்து கண்டு கொள்ளலாம் விடுவதாலேயே நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.
* விலையுயர்ந்த நகைகள் அணிந்து கொண்டு வெளியில் செல்ல நேர்ந்தால் துப்பட்டா அல்லது சேலையை கொண்டு மறைத்தபடியே செல்ல வேண்டும். திருமணம், வரவேற்பு உள்ளிட்ட விழக்களுக்கு செல்லும் போது நகைகளை அந்த இடத்திற்கு கொண்டு சென்று அணிவதே பாதுகாப்பானது.
* எதிர்பாராமல் வழிப்பறி நடந்து விட்டால் பதற்றப்படாமல் நிதானித்து வாகன எண், வந்த நபர்கள், வண்டியின் வகை ஆகியவற்றை கவனித்து காவல் துறையினரிடம் தெரிவித்தால் குற்றவாளிகளை உடனே பிடிக்க முடியும்.
* தனியாக அமைந்துள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியில் சென்று விட்டு வந்து வீட்டு கதவை திறக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* குழந்தைகளை பள்ளிகளில் இருந்து அழைத்து வரும் போது அறிமுகமான வாகனங்களில் பயணிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் இதர வாகனங்களில் திரும்பி வர நேர்ந்தால் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள் பயணம் செய்யும் வாகனம் குறித்த விவரங்களை குடும்பத்தாருக்கு சரியாக தெரியப்படுத்த வேண்டும். தனியாக செல்லும் போது பாதிப்பு ஏற்படுவதாக உணர்ந்தால் உடனடியாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு சென்று விட வேண்டும். ஆபத்தான சமயங்களில் உடனடியாக காவல்துறையின் உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்
வழிப்பறி காரணமாக பாதிக்கப்படாமலிருக்க சமயோசிதமாக செயல்படுவது எப்படி என்று பார்க்கலாம்.
* வெளியிடங்களுக்கு செல்லும்பெண்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.பொது இடங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பதுடன். அதிகமாக போன் பேசுவது அதனுள் மூழ்கியபடி நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது அவையும் வழிப்பறிக்கு காரணமாக அமையக்கூடும்.
* பணத்தை பொது இடங்களில் வைத்து எண்ணக்கூடாது. விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதிலும் எச்சரிக்கை வேண்டும்.
* இரவு நேரத்தில் தனியாக வீட்டிற்கு செல்லும் நிலையில் மக்கள் நடமாட்டம் உள்ள வழியில் தான் செல்ல வேண்டும். அதேபோல் இரவு நேரத்தில் வாகனத்தில் தனியாக செல்ல நேர்ந்தால் வெளிச்சமான பகுதியிலோ, போலீஸ் நடமாட்டம் உள்ள பகுதி வழியாகவோ செல்ல வேண்டும்.
* வாகனத்தை நிறுத்தும் போது தனியாக நிறுத்தாமல் மற்ற வாகனங்கள் இருக்கும் இடத்திலேயே நிறுத்த வேண்டும்.
* வீதியில் நடந்து செல்லும் போது செல்போன் அரட்டை காரணமாக கவனக்குறைவு ஏற்பட்டு பின் தொடரும் நபர்கள் குறித்து கண்டு கொள்ளலாம் விடுவதாலேயே நகைப்பறிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன.
* விலையுயர்ந்த நகைகள் அணிந்து கொண்டு வெளியில் செல்ல நேர்ந்தால் துப்பட்டா அல்லது சேலையை கொண்டு மறைத்தபடியே செல்ல வேண்டும். திருமணம், வரவேற்பு உள்ளிட்ட விழக்களுக்கு செல்லும் போது நகைகளை அந்த இடத்திற்கு கொண்டு சென்று அணிவதே பாதுகாப்பானது.
* எதிர்பாராமல் வழிப்பறி நடந்து விட்டால் பதற்றப்படாமல் நிதானித்து வாகன எண், வந்த நபர்கள், வண்டியின் வகை ஆகியவற்றை கவனித்து காவல் துறையினரிடம் தெரிவித்தால் குற்றவாளிகளை உடனே பிடிக்க முடியும்.
* தனியாக அமைந்துள்ள வீடுகளில் வசிப்பவர்கள் வெளியில் சென்று விட்டு வந்து வீட்டு கதவை திறக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* குழந்தைகளை பள்ளிகளில் இருந்து அழைத்து வரும் போது அறிமுகமான வாகனங்களில் பயணிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் இதர வாகனங்களில் திரும்பி வர நேர்ந்தால் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும் பெண்கள் பயணம் செய்யும் வாகனம் குறித்த விவரங்களை குடும்பத்தாருக்கு சரியாக தெரியப்படுத்த வேண்டும். தனியாக செல்லும் போது பாதிப்பு ஏற்படுவதாக உணர்ந்தால் உடனடியாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு சென்று விட வேண்டும். ஆபத்தான சமயங்களில் உடனடியாக காவல்துறையின் உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X